இன்னும் வரலயாம்
விடிய எழும்பி
முடி வெட்டப் போனவராம்
இன்டைக்கு நல்ல வடிவா
இருந்தவராம்
அம்பது வயசெண்டாலும்
மனுசன் நல்ல உருப்படி
இண்டைக்குத்தான்
தாடியும் வழிச்சவராம்
பொஞ்சாதிக்காரி
சொல்லிச் சொல்லிக் கத்திறா
ஒரு நாளும்
இல்லாத புதினமா
மரக்கறி வாங்கிக் குடுத்தாராம்
சாமியும் கும்பிட்டவராம்
கடைசிப் பெட்டையோட
வெளையாடித் தரிஞ்சவராம்
அந்தளவுக்குப்
பெரிசா வசதிக்காரனுமில்ல
ஓட்டச் சைக்கிள்தான் ஓடித்திரிவார்
கையில காசும் வெச்சிருக்கிறலயாம்
மதியம் கறியாக்க
கொச்சிக்காத் தூள் வாங்கத்தான்
காசுகொண்டு போனவராம்
கடக்காரந்தான் சொன்னவனாம்
கறுத்தக் கண்ணாடி பூட்டின
வேனில தங்கராசு அண்ணன்
போறாரெண்டு
ஊர்ச்சனமெல்லாம்
பாழடஞ்ச கிணறெல்லாம்
தேடுறதப் பாத்தா
தங்கராசு அண்ணன் என்ன
சின்னப்பிள்ளையா?
கிணத்துக்குள்ள தவறி விழ
முன் வீட்டுக்காரன் கதச்சான்
பத்து வரிசத்துக்கு முதல்
ஆரோ பசிக்குதெண்டு கேக்க
சோறோ ஏதோ குடுத்தவராம்..…………..!
0 comments:
கருத்துரையிடுக