இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

பதிலீடு இல்லாத இழப்புக்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010
நீங்கள்
இப்போது எத்னையோ
காரணங்கள் சொல்லலாம்
உங்களை நியாயப்படுத்தத் துடிக்கலாம்
இவையெல்லாம்
தார்ச் சாலையாய்க் கொதிக்கும்
எங்கள் மனங்களை ஈரப்படுத்தாது..!

நீங்கள்
இப்போது எதையும் தரலாம்
அவியாத பருப்பை
ரொட்டித் துண்டுகளை
சிறை போல்
அடைக்கப் பட்ட கூடாரத்தை
இப்படி எதை எதையோ
இவையெல்லாம் எங்கள்
கண்ணீரைத் துடைக்கக் கைக்குட்டையாகாது……!

உங்களால் திருப்பித் தரமுடியுமா…?
நாங்கள் உருண்டு புரண்டகிராமத்தை
பாட்டனும் பாட்டியும்
கலவி செய்த கட்டிலை………
காட்டுத் தேங்காய் மரத்தடிக்
காளி கோயிலை…..
புழுதி படிந்த கிறவல் வீதியை…….
உழுது களிக்கும் பச்சை வயலை…….
இத்தனைக்கும் மேலாய்
எங்கள் நிம்மதியை……..!

இவற்றையெல்லாம்
திருப்பித் தந்தாலும்
நீங்கள் திருப்பித் தரும் பட்டியலில்
பாதி வயதில் செத்துப் போன
நண்பன் இருக்கமாட்டான்.
முற்றத்து மல்லிகை பட்டுப்போயிருக்கும்.
எங்கள் விடு முழுசாய் இருக்காது.
உறகள் ஒன்று சேராது.

உங்கள்
திருப்பித் தரும் பட்டியலில்
புதிதாய்ச் சில விபரங்களிருக்கலாம்…….
உடைந்து போன வீடுகளின் எண்ணிக்கை.
புதைக்கப்பட்டிருக்கும்
வெடி குண்டுகளின் விபரம.;
காலியான சொத்துக்களின் கணக்கெடுப்பு.
முள் கம்பிகளின் மொத்த எi.ட
ஊரில் கடைசியாய்க் காணாமல் போனோரின்
எலும்புகள் என
நீழும் பட்டியல்……

எமக்காய்
புதியதொரு உலகத்தை
உற்பத்தி செய்தாலும் எப்படி முடியும்
இவற்றை அப்படியே
உங்களால் திருப்பித்தர………

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket