பூரணமாகிய
சம்பூர் மண்ணை
வேறுலகம் அறியாது
நாங்கள் மட்டும்
அறிந்த போது
அங்கிருந்தோம் நாம்….
சம்பூரே செய்தியாகி
ஊலகத்திசையெல்லாம்
ஓலித்த போது….
என் இனிய தாய் நிலமே
நாங்கள் உன்னோடில்லை
இன்று தனித்திருக்கிறாய் நீ…
உன் பிள்ளைகளின்
சுவடுகளை மட்டும் சுமந்தபடி……!
0 comments:
கருத்துரையிடுக