இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

பேரக்குழந்தைக்காய் எழுதும் கவிதை

வியாழன், 7 அக்டோபர், 2010
உறுதியாய்ச் சொல்கிறேன்
என் கவிதைக்கு யாரையும்
கொலை செய்யத்தெரியாது
காயப்படுத்தக் கற்றுக்; கொடுக்கவில்லை

வலி பொறுக்கத் தெரியாத கவிதை
விழி பிதுங்கிய படியே
பீச்சியடிக்கிறது ரணங்களை
மௌனங்களை அணிந்து கொண்டு தாளில்
அப்பி வைக்கிறது வலிகளை….

ஏன் கவிதை
இதுவரை யாரையும்
கொலை செய்யவில்லை என்ற
நம்பிக்கையிலும் சவந்தோசாசத்திலும்தான்
அழிந்து அழிந்து எழும்
பீனிக்;ஸ் குருவியாய்
இன்னும் வாழ்கிறேன்…..

சித்தம் தெளியாமல்
கடவாய்ப்பற்களில் ரத்தம் வழிய
நரபலிக்காய்த் துரத்தும் உன்னை
என் கவிதை
பின் தொடர்கிறது…..
ஒரு புகைப்படக் காரனைப்போல

புத்தி தெளிந்த பின்
என் கவிதையைப் படி
உன் கழுத்துச் சட்டையைப் பிடித்து உலுப்பும்
மனச்சாட்சியின் சுவர்களிளெல்லாம்
ஆணி அடிக்கும்
முகத்தில் காறித்துப்பும்
உன்னை வெளிச்சமிட்டுக் காட்டும்
நீ செய்ததையெல்லாம் பட்டியலிடும்
அன்று வெட்கித் தலை குனிவாய நீ…;

;
இறுதியில்
உன்னையும் என்னையும்
மரணம் விழுங்க புதிதாய்ப் பிறக்கும்
என் பேரக்குழந்தைக்கு
உன்னை அடையாளப்படுத்தும்

அதற்காகத்தான்
உயிரைபிச்சைப் பாத்திரத்தில் சுமந்தபடி
இன்னும்…..
செத்துச் செத்து எழுதுகிறேன்
எனது பேரக் குழந்தைக்காக……..

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket