உரசிப் போகும்;
நீளப் பாதையின் ஓரத்தில்
காக்கைகள் கொத்தும் படி
செத்துக்கிடந்தது நாயொன்று….
அதே பாதையில்
சற்றுத் தொலைவில்
நாய்கள் கூடக் கவனிக்;காமல்
அம்மணமாய்க் கிடந்தது
ஒரு ஆணின் சடலம்.
செத்துக்கிடந்த நாய்க்கு
வயசாகியிருந்தது
மயிர்கள் சொரிந்து
உடம்பெல்லாம் குட்டை….
தோலில் சுருக்கங்கள்……!
அம்மணமாய்க் கிடந்த
மனிதப் பிணத்தின் முகத்தில்
அப்போதுதான்
மீசையம் தாடியும் அரும்பியிருந்தது……!
0 comments:
கருத்துரையிடுக