உசுப்பி விட்டுப்போகும்
கனவுகள் தொடர்கின்றன…….
நம்பிக்கை இழந்து போகும் .
என் கனவின் இறுதிப் பகுதியில்
திடுக்கிட்டு எழுகிறேன்……..
நேற்றும் இப்படித்தான்
என் மரண ஊர்வலம்
நடந்துகொண்டிருந்த போது
விழித்தேன்
கனவு பலிக்காதிருக்க
அதிகாலை எழுந்து
கிணற்றில் கல்லைப் போடுவதே
இப்போது
என் வேலையாகிவிட்டது
அன்று
இரண்டு துப்பாக்கிகள்
என்னைத் துரத்த
தலை தெறிக்க
ஓடிக்கொண்டிருந்தேன்
முண்டங்களை
கடந்து கடந்து ஓடி
மூச்சி வாங்கி
ஒரு மூலையில் ஒழிந்தேன்
மூலையில்
என் மார்பைத் தொட்டபடி
இன்னொரு துப்பாக்கி
நல்ல வேளை
விளித்துக் கொணடேன்….
ஒவ்வொரு முறையும்
கனவின் முடிவிலிருந்து
தப்பி விடுவதும்
கிணற்றில் கல்லைப் போடுவதுமே
இப்போது
என் வேலையாகி விட்டது….!
0 comments:
கருத்துரையிடுக