இருத்தல் என் சுதந்திரம்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனதின் துயர்மிகு பாடல்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

வாழ்வின் கரைகளில் சதா மடிந்து

அழுதுயிர்கின்றன அலைகள்

நீளமாய் இன்னும் நீளமாய் இடையறாது

என் மனதில் ஒலிக்கிறது துயரின் பாடல்

அலக்கழிக்கப்பட்ட காற்றின் சொற்களில்

மொழிதல் ஏதுமற்று நனைகிறேன் நான்

முகமற்றிருக்கின்றன காலமும் காற்றும் நானும்

ஓய்வற்று வாழ்வை மோகித்தழுகிறது என் பாடல்

மெளனத்தை யாரோ என் மீது பூசி விட்டு போகிறார்கள்

அதை உடைத்து பிரவாகிக்கிறது உள்ளிருந்து உயிர்

வானம் நிறமற்றிருக்கிறது என்னில்

மனதில் எழும் நீளப்பாடல்களில் ஒன்று

நாளை பற்றியதாக இருக்காலாம்

வெற்றுடலை சுமந்தலையும் சலிப்பில்

விறைக்கிறது குதிகால்களில் ஒன்று

நான் என்னும் பிண்டம் தொலையாதிருக்க

சொற்களைத்தேடுகிறேன்

தேடித்தொலையும் விதி இன்னும் கைப்படவில்லை

காலத்தின் முடிவுறாக்கரைகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவடுகள்

சுவர்க்கடிகாரத்தின் முட்களில்

நொடி நொடியாய் கசிகிறது

அள்ள அள்ள தீர்ந்து போகாத கனவு

சிலந்தி பூச்சியை போல காலம்

மிக இயல்பாய் வலைகளை நெய்துகொண்டிருக்கிறது

சிக்கிவிடாதிருக்கும் சூக்குமங்களில்

சிக்கிக்கொண்டிருக்கிறேன் நான்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket