இருத்தல் என் சுதந்திரம்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

காதலி எழுதிய கடிதங்கள் - 1

செவ்வாய், 4 ஜனவரி, 2011


என்னில் எல்லாமாகிவிட்ட காதலனுக்கு

வாழ்வு இற்று விட்ட பின்னும்

நீ இருக்கின்றாய் என்னும்

என்னுயிரை மீட்டுதருகின்ற செய்தி ஒன்றுக்காய்

இன்னும் செத்துவிடாமல் இருக்கும்

காதலி எழுதிக்கொள்வது

தீப்பிளம்ப்பாய் சுடுகின்ற ஒவ்வரு நிமிடங்களில்

ஓங்கியழ உரமுமின்றி உன்னினைவில் ஊனுருகி

உன்னுருவம் கண்களிலே மறையாதிருக்க என்று

தூங்காது விழித்திருக்கும் என்விதியை அறிவாயா

எதை நினைத்து அழுவதென்று

கண்களுக்கு தெரியவில்லை

எங்கென்று தெரியாதா எந்தன் தம்பிக்கா

தாலியிட்ட கணவனின்னும் மீண்டுவரா பெருவலியில்

துடித்தழும் என் அக்காக்கா

இத்தனைக்கும் மேலாக என்னுயிரென்று ஆகிவிட்டு

இன்னும் மீழாமல் இருக்கின்ற உந்தனுக்கா

இத்தனைக்கும் அழுதழுது கண்கள் இன்னும் ஓயவில்லை

ஆறாத பெருவலியில் அடிமனது துடித்தாலும்

மாறாத உன் நினைவே இன்னும் எனை

உயிர் வாழ வைக்குதடா

போர் கொண்டு போய்விட்ட என்வாழ்வின் நின்மதியை

நீவந்து தருவாயா என்று மனம் ஏங்குதடா

எங்கோ நீ இருக்கின்றாய்

என்னினைவில் துடிக்கின்றாய்

மீண்டு வந்தென்னை மார்பு தழுவி விட

மனம் ஏங்கி தவிக்கின்றாய்

என்றெல்லாம் அடிமனது எனக்குள்ளே

உரைக்கின்ற ஒன்றில்தான்

இன்னும் இந்த பிச்சை உயிர்

என்னில் ஒட்டிகிடக்கிறது

காற்றோடு கலந்துவிட்ட

உன் மூச்சுக்காற்றுத்தான் எதோ எந்தனுக்கு

தைரியத்தை கொடுக்கிறது

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket