என்னில் எல்லாமாகிவிட்ட காதலனுக்கு
வாழ்வு இற்று விட்ட பின்னும்
நீ இருக்கின்றாய் என்னும்
என்னுயிரை மீட்டுதருகின்ற செய்தி ஒன்றுக்காய்
இன்னும் செத்துவிடாமல் இருக்கும்
காதலி எழுதிக்கொள்வது
தீப்பிளம்ப்பாய் சுடுகின்ற ஒவ்வரு நிமிடங்களில்
ஓங்கியழ உரமுமின்றி உன்னினைவில் ஊனுருகி
உன்னுருவம் கண்களிலே மறையாதிருக்க என்று
தூங்காது விழித்திருக்கும் என்விதியை அறிவாயா
எதை நினைத்து அழுவதென்று
கண்களுக்கு தெரியவில்லை
எங்கென்று தெரியாதா எந்தன் தம்பிக்கா
தாலியிட்ட கணவனின்னும் மீண்டுவரா பெருவலியில்
துடித்தழும் என் அக்காக்கா
இத்தனைக்கும் மேலாக என்னுயிரென்று ஆகிவிட்டு
இன்னும் மீழாமல் இருக்கின்ற உந்தனுக்கா
இத்தனைக்கும் அழுதழுது கண்கள் இன்னும் ஓயவில்லை
ஆறாத பெருவலியில் அடிமனது துடித்தாலும்
மாறாத உன் நினைவே இன்னும் எனை
உயிர் வாழ வைக்குதடா
போர் கொண்டு போய்விட்ட என்வாழ்வின் நின்மதியை
நீவந்து தருவாயா என்று மனம் ஏங்குதடா
எங்கோ நீ இருக்கின்றாய்
என்னினைவில் துடிக்கின்றாய்
மீண்டு வந்தென்னை மார்பு தழுவி விட
மனம் ஏங்கி தவிக்கின்றாய்
என்றெல்லாம் அடிமனது எனக்குள்ளே
உரைக்கின்ற ஒன்றில்தான்
இன்னும் இந்த பிச்சை உயிர்
என்னில் ஒட்டிகிடக்கிறது
காற்றோடு கலந்துவிட்ட
உன் மூச்சுக்காற்றுத்தான் எதோ எந்தனுக்கு
தைரியத்தை கொடுக்கிறது
0 comments:
கருத்துரையிடுக