இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 30 டிசம்பர், 2010

சூரியனின் மரணதுள் புதைந்தது உலகு

வியாழன், 30 டிசம்பர், 2010

சூன்யத்துள் மூழ்கி

இருட்டை அப்பிக்கொண்டது பகல்

சூரியனின் மரணதுள் புதைந்தது உலகு

தடுக்கி விழுந்த மனங்களை

பொருத்திக்கொண்டனர் மனிதர்கள்

பேய்களைப் புணர்ந்தது வானம்

நிணக்காற்றில் நீந்திக்கொண்டிருந்த

வலுவற்ற உடலால்

சூரியனையைச் சுமந்து

இருட்டோடு இருட்டாக

சுடலையில் புதைத்தனர்

தம்மையும் சேர்த்து

சூரியனை புதைத்த பின்னும்

அதில் பலர் பேசிக்கொண்டனர்

நாளை விடியுமென்று...

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket