சூன்யத்துள் மூழ்கி
இருட்டை அப்பிக்கொண்டது பகல்
சூரியனின் மரணதுள் புதைந்தது உலகு
தடுக்கி விழுந்த மனங்களை
பொருத்திக்கொண்டனர் மனிதர்கள்
பேய்களைப் புணர்ந்தது வானம்
நிணக்காற்றில் நீந்திக்கொண்டிருந்த
வலுவற்ற உடலால்
சூரியனையைச் சுமந்து
இருட்டோடு இருட்டாக
சுடலையில் புதைத்தனர்
தம்மையும் சேர்த்து
சூரியனை புதைத்த பின்னும்
அதில் பலர் பேசிக்கொண்டனர்
நாளை விடியுமென்று...
0 comments:
கருத்துரையிடுக