இருத்தல் என் சுதந்திரம்

புதன், 17 நவம்பர், 2010

கடவுளும் மயிராண்டிக் கதைகளும்

புதன், 17 நவம்பர், 2010

முன்பு முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இற்றுவிட்ட சுவடிகளில்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் திருவுருவே

எங்கள் முதுகுகள்

எரிந்த போதும் உன்

எக்கண்ணும் திறக்கவில்லை

ஓர் அசுரன் வந்துவிட்டால்

வில்லோடும் விடக்கணையோடும்

மண்மீது பிறப்பாயென்று

மாகதைகள் சொல்வதுண்டு

கொடுவெளியில் எம்மக்கள்

ஒன்றற்ல இரண்டல்ல

காலிழந்து கையிழந்து

குறையுயிரைக் காப்பதற்கு

பல்லாயிரம் பேர் கூவியழைத்தும் நீ

வில்லோடு பிறக்கவில்லை

உன் தாயென்ன மலடா

இல்லை கருத்தடைதான் செய்தாளா

மழைபொழிய கோவியர்க்கு

மலை பெயர்த்து குடைபிடித்த

உன் பெருங்கைகள்

வீடின்றி மரத்தின் கீழ்

கூடார ஓட்டைகளில்

மழை ஒழுகி வழிந்த போது

குடைகொண்டு நீழவில்லை

தேவர்களின் குரல் கொண்டு

எமக்கழவுந் தெரியவில்லை

மானிடர்கள் சொல்லிவைத்த

மயிராண்டிக் கதைகளுக்குள்

தூக்கம்கலையாது தூங்குகிறாய்

அது நிற்க...

மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத எங்கும் இல்லாத

ஈழத்தமிழர் எனும்

ஈனப்பிறப்பொன்றை எமக்கு

எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket