அபத்தத்தின் அரூபம் படிந்து
ஆதர்சியத்தை இழக்கிறது பெருவெளி
மூர்க்கத்தில் நேற்று வீங்கிய முலைகளில்
நீல வல்லிருள் படர
சோபிதங்களின் சுருக்கத்துள் சுருள்கிறது
அவள்தேகம்
சில்லீறுகளின் சத்தத்தில்
எரிந்த சிறட்டையின் கரியை மீண்டும்
அடுப்பில் போட்டு ஊதும் கிழவியின் சத்தம்
போர்வைகளில் ஊர்ந்து அவளின் ஆண்மாவைச் சுடும்
அடர் மழையொன்றுக்கு கறுப்புப்பிய மேகம்
கால்நீட்டும் கணத்தில்
திமித்த அவளின் மங்கலான உடலில்
துமிக்கிறது பயத்தின் மழை
வேட்டுவத்தின் சொற்களோடும்
மிருகத்தின் பற்களோடும்
அவளுக்காக சுறனையற்று விறைத்து நீழ்கிறது
வக்கிரத்தில் ஊதிய குறி
பல்லியைப் புணர படர்கிறது பாம்பின் நிழல்
அவள் வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்
ஆடைகற்ற பொழுதுகளுக்கப்பால்
அவளின் வெட்கம் தற்கொலைத் தினவற்ற
வாழ்தலின் ஆசை மீதே சிவக்கிறது
தடுப்புக்காவல்களுக்குள் தொலையாதிருக்க
விதியின் மீது படுக்கை விரிக்கிறாள்
0 comments:
கருத்துரையிடுக