இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

மீளப்பலித்தல்

வியாழன், 7 அக்டோபர், 2010
பழைய கதைகளென
பள்ளியில் படித்தவையெல்லாம்
நான் வாழும் காலத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
பலிக்கக் காண்கிறேன்…….!

அன்று
யூதர்கள் யேசுவை
சிலுவையில் அறைய கல்வாரி மலைக்கு
கூட்டிச் சென்ற போது
கூடி நின்று ஒப்பாரிவைத்த
பெண்களிடம்
பிள்ளைகள் பெறாத பெண்களை
புண்ணிய வதிகளெனப் போற்றும்
காலம் வரும் என்றாராம் யேசு…….!

முந்தநாள்
உச்சி வெயிலில் வீதியால்
பறட்டைத் தலையுடன்
ஒப்பாரி வைத்துப் போனாள்
ஒரு தாய்க்கிளவி……

ஆண்டவா…….!
என்னை பிள்ளை பெறாதவளாய்
படைத்திருக்கக் கூடாதா என்றபடி…..!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket