இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

குஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை

வியாழன், 7 அக்டோபர், 2010
ஏழையாய்ச் சபிக்கப்பட்ட
என் வயிற்றில் பிறந்து
மலையாய் வளர்ந்தவனே…….!
எட்டுத்திக்கும் தேடிவிட்னே உன்னை….
எங்கே இருக்கிறாய்
என் அழு குரலும் எட்டாத
தூரத்துள்..!

நேற்றிரவும்
என் கனவில் நீதான்
நீயின்றிக் கனவில் இப்போது
வேறு பொருள் தெரிவதில்லை
உன்னுருவம் கனவில் தெரிகின்ற
இரவெல்லாம் ஊரே கூடிவிடும்
என் ஒப்பாரி ஒலி கேட்டு……….

அம்மா நான்
பட்டினியால் துடித்தாலும்
விறகு விற்றும் கூலிஜ வுலை செய்தும்
உன் உடலை வளர்த்த கதை
நான் அறிவேன் நீயறிவாய்
பாதகர்கள் அறிவாரோ…..?

உயிர் காக்க வந்த நம்மை
ஏன் பிரித்தான் கடவுள்…..
என் தொங்கல் சேலையில்
பற்றிப்பிடித்திருந்த உன்னை
பறித்தெடுத்துப் போனாரே
யமன் உருவில் பாதகர்கள்……..
கடசியாய் நீ கடித்த சோளங் கதிர் கூட
இப்போதும் என்னிடத்தில் உளுத்துப்போய்………!

என்ன சொல்லி அழுதிருப்பாய்
அடிவாங்கும் போது…..
அம்மாவை அழைத்திருப்பாய்
பதறுதடா மனது…….
உன்னினைவில் அழுதழுது
உயிரின்றி உலாவுகின்றேன்.
நான் உன்னை
தேடாத இடமில்லை
கேக்காத ஆழில்லை
சாத்திரிகள் சொன்னார்கள்
நீ உயிரோடிருப்பதாய்…!
என் கருவில் வந்தவனே
அழுகுரலும் கேட்காதா உன் காதில்…..
சத்தியமாய்ச் சொல்கிறேன் மகனே..!
இன்னும் நானுனக்கு
சாக்கிரியை செய்யவில்லை……!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket