பிரிவுக்கான
எந்தச்சாத்தியக் கூறுகளும் அற்றதாய்
நிகழ்ந்து போயிற்று நம் கடைசிச் சந்திப்பும்
இயல்புகளின் ஆக்கிரமிப்புக்குள்
வர்ணங்களற்ற கோடுகளை இறுக்கி
போலிகளின் முதுகில் அமர்ந்து
புண்ணகைத்த உதட்டின் அர்த்தங்களை
யூகிக்க முடியவில்லை
சந்திப்பின் பின்னரான தொலை துர உலையாடலில்
நீ மாறியிருந்தாய்
பிரிவுக்காண காரணங்கிளை ஒப்புவித்தபடி
தப்பித்தலின் இடுக்குகனில் இருந்து
அந்த உரையாடலை நிகழ்த்தியிருந்தாய்
உனக்கிருந்த சூழல் கோபுரங்களையும்
எனக்கு பள்ளத்தாக்குகளின் பயங்கரத்தில்
வெறுப்புக்களையும் விட்டிருந்தது
நீ என் காதல் கடிதங்களை எரித்த போது
நானோ எரிந்து போன ஊரின்
சாம்ல் முகடுகளில் இருந்தேன்
நீகவர்ச்சியான எதிர்காலத்தின்
தோழ்களில் தொங்கிய நேரம்
காவலரனொன்றில் துப்பாக்கிச் சன்னங்களில்
தப்பிக்கொண்டிருந்த தம்பியின் உயிரில்
நிலைத்திருந்தேன்
அடுக்குமாடியில்
நீ அடுத்த காதலை பற்றிச் சிந்தித்த போது
பதுங்குகுழியில் நாளை தொடர்பாக
மண்டாடிக்கொண்டிருந்தேன்
உனது மாடிவீட்டின் கனவின் முரணில்
எனது அகதிக் கூடாரங்கள் விரிந்து கொண்டிருந்தது
நீ பிரிதலின் பொருட்டு காலம்
வித்தியாசங்களின் மேல் சுழன்றது
உன்னதங்கள் உடைந்து
புள்ளியாய்ச் சுருங்கிய என் எச்சத்தின் மீது
இன்றுனது வாழ்வு தொடங்கியிருக்கும்
அருவருப்பூட்டும் முத்தத்தடங்கள்
என்னை நினைக்க வைக்கலாம்
கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில்
அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி
பிடிமண்ணுமற்றலையும்
என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை
யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர்
அந்தக் கணத்தில் காலத்திடம்
ஆயிரம் நன்றிகளைச் சொல்லு காதலியே
பதுங்கு குழியில் உயிர் பிழைத்த
என்னுணர்வு கொண்டு உட்சாகம் கொள்
காலம் வித்தியாசங்கள் மீதும்
பொருத்தப்பாடுகள் மீதுமே சுழல்கிறது
0 comments:
கருத்துரையிடுக