நடந்த கதைகளையெல்லாம்
மறந்துவிட்டு
காட்டு விலங்கெல்லாம் அழைத்து
சத்தம் போட்டது முயல்
காட்டில் அழகான மிருகம்
தானே என்றும்
தனக்கு வேகமாக ஓடத் தெரிவதால்
தன்னில் சிறிய விலங்குகளுக்கு
தான்தான் தலைவனென்றும்
உரத்துப் பேசியது
அப்பன் காலத்து
கதைகளை மறக்காமல்
பற்றைக்குள் அமைதியாய்
படுத்திருந்த ஆமை
சிரித்துக் கொண்டே தலையாட்டியது
பொறு……பொறு…….
வேகமாய் ஓடினாலும்
தூங்குவாய்தானே என்று…..
0 comments:
கருத்துரையிடுக