வீட்டின் கூரை நீக்கி
எந்த விடியலும் இதுவரை
எட்டிப் பார்க்க வில்லை…..
எங்கள் பிள்ளைகள்
பாடசாலை செல்கிறார்கள்
ஆசிரியரிடம் இன்பம் என்பதற்கு
அர்த்தம் கேட்டு……
சுதந்திரத்திற்கு சொல்
விளக்கம் கேட்டு……
இவற்றுக்கெனல்லாம் அர்த்தம் தெரியாமலே
வாழப் பழகிக் கொள்கிறது
எங்கள் சந்ததி……
துன்பமும் அவலமுமே
எமக்கு நெருக்கமானவை
எம்மோடு உறவாடுபவை…….
எனினும் வாழப் பழகிக் கொண்டோம்
விதியை நொந்து கொண்டு……..!
ஒரு வகையில்
பெருமிதமடைகிறோம்
துன்பத்துள் வாழ்கிறோம்
என்பதற்கப்பால்
ஒரு வரலாற்றுக்குள்
வாழப்பிறந்ததை எண்ணி……!
0 comments:
கருத்துரையிடுக