என் வீட்டின்
பின் புறத்தில் எங்கள்
இறுதிக் கணங்களை
எதிர்பார்த்தபடி
உருமறைக்கப் பட்ட பதுங்குகுழி
ஒன்றில் நான்…….
ஆம்மாவும் அப்பாவும்
ஒரு பதுங்கு குழியில்
நானும் தம்பியும் இன்னொரு பதுங்கு குழியில்
எறிகணை கக்கும் கரும் புகையில்
இன்னும் உரு மறைகிறது
எங்கள் பதுங்கு குழிகள்
இரண்டில் எந்தப்பதுங்கு குழி
தகர்க்கப் பட்டாலும்
வாழ்க்கை இருண்டு விடும்
என்ற நடுக்கம் தோய்ந்த பயத்தில்
நாங்கள்………!
மழையாய்ச் சொரியும்
ஏறிகணைகளில்
எரிகிறது எங்கள் ஊர்
வெடிச் சத்தங்களைத் தாண்டி
எங்கும் எதிரொலிக்கிறது
அழு குரல்கள்;……
எல்லாக் கடவுள்களையும்
எங்கள்
பதுங்கு குழியினுள் அழைத்து
உயிர்ப் பிச்சை கேக்கிறோம்
எனினும்
காளி கோயிலின்
கூரை பிரித்து இறங்கி
வெடிக்கிறது குண்டு……!
சாவைக் கண் முன் நிறுத்தி
ஊசலாடுகிறது உயிர்…
ஏந்த எறிகணை எங்கள்
பதுங்க குழியைத் தகர்க்கப் போகிறது என்ற
பயம் கலந்த எதிர்பார்ப்போடும்
எந்த எறிகணையும் எங்கள்
பதுங்கு குழி மேல் விழக்கூடாது என்ற
பயங் கலந்த வேண்டுதலோடும்
கழியாமல் கழிந்தது
அன்றைய இராப் பொழுது…….!
0 comments:
கருத்துரையிடுக