இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

காணமல் போன கடவுள்கள்

வியாழன், 7 அக்டோபர், 2010
அமைதி
உறைந்து கிடந்த
அன்றைய பின்னிரவில்
கடவுளைத்க் காலம் முழுக்கத் தேடி
தோற்றுப் போன களைப்பில்
வேருத்து விருவிருக்க
பிரமாவும் திருமாலும்
என் கனவில் தோன்றினர்………


கடவுள் இல்லாத உலகில்
தேடுதல் பொய்த்துப் போனதால்…?
இருவரும் நிறையக்கதைத்து
இறுதியாய் ஒரு முடிவெடுத்தனர்.
இலங்கையில் காணாமல் போனோரை
பன்றியாயும் பறவையாயும் மாறித்
தேடுவதென்று…!


மகிழ்ச்சியில்
அழகுத் தூக்கம் கலைத்து
விழித்துப் பார்த்தேன்
இருவரையும் காணவில்லை…..!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket