உறைந்து கிடந்த
அன்றைய பின்னிரவில்
கடவுளைத்க் காலம் முழுக்கத் தேடி
தோற்றுப் போன களைப்பில்
வேருத்து விருவிருக்க
பிரமாவும் திருமாலும்
என் கனவில் தோன்றினர்………
கடவுள் இல்லாத உலகில்
தேடுதல் பொய்த்துப் போனதால்…?
இருவரும் நிறையக்கதைத்து
இறுதியாய் ஒரு முடிவெடுத்தனர்.
இலங்கையில் காணாமல் போனோரை
பன்றியாயும் பறவையாயும் மாறித்
தேடுவதென்று…!
மகிழ்ச்சியில்
அழகுத் தூக்கம் கலைத்து
விழித்துப் பார்த்தேன்
இருவரையும் காணவில்லை…..!
0 comments:
கருத்துரையிடுக