இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

கடைசி மனிதனின் மரணம்.

வியாழன், 7 அக்டோபர், 2010
வாழ்கையை
அழகாய் நேசித்த
அந்த நல்ல மனிதனும்
நேற்று வீதியில் இறந்து கிடந்தான்
அவனேதான் நான் நம்பியிருந்த
கடைசி மனிதன்…..

அவன் முகத்தில் ஏதோ
பிடிப்பற்ற வெறுப்பு
அறிந்த வரை…..
வாழ்க்கையை உலகத்தை
நேசித்திருந்தான்.

எனது
கடைசி மனிதனின் மரணத்தில்
எந்தக் காரணமும்
முழுசாய்த் தென்பட வில்லை

அவனது
நாட்குறிப்பின் நடுப்பக்கத்தில்
இரண்டு கவிதைகள்

முதல் கவிதை
வாழ்க்கையைப் பற்றியது
அடுத்த கவிதை
மரணத்தைப் பற்றியது…!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket