முழங்காலுக்கும்
முடிச்சிப்போட்டு முடிச்சிப்போட்டு
களைத்துப் போனவர்கள்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
இன்று….?
முழுப்பூசனிக்காயை சுற்றியிருந்து
சோற்றுக்குள் மறைக் முயன்று
பாதிப் பேரின் பானை
காலியாய்………
பூசனிக்காய் சோற்றுக்குள்
காணாமல் போனது உண்மைதான்
சோற்றுக்குள் மறைந்த
பூசனிக்காய்
பூதமாய் வளர்வதை
பாழாய்ப் போனவர்கள் இன்னும்
அறியவில்லை….?
பூசனிக்காய்ப் பூதம்
முற்றிப் பெருத்து வளர்கிறது
வெறும் உண்மையில் ஊதி வளரும்
பூசனிக்காய்ப் பூதம் பொல்லாது
இன்றோ நாளையோ
நாளை மறு நாளோ
கடவாய்ப் பல் காட்டி
பூதம் வெளிப்படும்………!
பூசனிக்காய்ப் பூதம்
வெளிப்படும் காலத்தில்
முடிச்சிப் போட
மொட்டைத் தலையும் இருக்காது
முழங்காலும் இருக்காது…!
0 comments:
கருத்துரையிடுக