எங்கள் முதுகுகள் எரிந்த போதும்
முக்கண்ணில் ஒரு கண்ணும் காட்டாது
நீ முப்புரம் எரித்த
மூத்த கதைகளுக்குள்
இன்னும் உலவித் திரிகின்ற
மூலத்தின் பராபரமே…!
உன் படைப்பில் உள்ளது போல்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்
செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும்
பிறந்திழைத்தேன் என் பெருமான்
உன் கணக்கில் சொல்லாத
ஈழத்தமிழன் எனும்
ஈனப்பிறப்பொன்றை எங்கிருந்து
ஏனளித்தாய் சொல்லு….?
1 comments:
Nanpa super da
கருத்துரையிடுக