இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

வியாழன், 7 அக்டோபர், 2010

எங்கள் முதுகுகள் எரிந்த போதும்

முக்கண்ணில் ஒரு கண்ணும் காட்டாது

நீ முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத

ஈழத்தமிழன் எனும்

ஈனப்பிறப்பொன்றை எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

1 comments:

Unknown சொன்னது…

Nanpa super da

கருத்துரையிடுக

 
◄Design by Pocket