இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 1 நவம்பர், 2009

ஊரின் நினைவுகளிலிருந்து

ஞாயிறு, 1 நவம்பர், 2009 0
ஊர்க் குருவி.

உயிர் பருகும் ஊர் நினைவில்
தினமும் உருக்குலைந்து போகிறதுமனது…….!
நடக்க இருக்க படுக்க என
சம்மந்தமில்லாமலும்
காரணமில்லாமலும்
மின்னல்கீற்றாய்
உசுப்புகிறது ஊர் நினைவு…

நான் நடக்கப் பழகிய தாய்மடியே….!
உன் மேனியில்
புரண்டு புரண்டு
ஊத்தை படிந்த என் தேகம்
இப்போதும்
அந்தப் புரள்வுக்காய் காத்துக்கிடக்கிறது…..

முன்பு காலால் மண்கிளறி
அதிலெழும் புழுதியெல்லாம்
மோந்து மோந்து மணப்பேன்
அந்தப் புழுதியெல்லாம்
என் சுவாசப்பைகளின் ஓரத்தில்
இறுகிப் போய் இருக்குமெனில....

சின்ன வயதில்
அம்மாவைக் காணாமல்
கோடிப் புறத்தில் பதுங்கி
மண் கட்டி திண்பேன்
அந்த மண்ணின் கட்டியெல்லாம்
இரைப்பையில் செரித்து
உடம்பெல்லாம் இரத்தமாய் ஓடுமெனில்…..

நானும் தம்பியும்
மண்ணில் உருண்டு
மணல் வீடு கட்டி விளையாடுவோம்
அந்த ஊத்தையெல்லாம்
என் தோலில் இப்போதும்ஒட்டியிருக்குமெனில்……

மண்ணோடு
ம்ஊரின் நினைப்போடும்
இந்தப் பிறப்பில் வாழ
இப்போதைக்கு
இவை போதும் எனக்கு…!

சனி, 31 அக்டோபர், 2009

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்

சனி, 31 அக்டோபர், 2009 1

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்


வயிற்றில் கரு சூல் கொள்ளாது

கர்ப்பம் சிதைந்து

அடிக்கடி கட்டி விழுந்து

துவாலை இறைத்து

நம்பிக்கை இழந்து கிடக்கும்

ஒரு தாயின் கர்ப்பப் பைக்குள்

நாற்றம் எடுத்துக்கிடக்கும்

சிறு இரத்ததுண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுகிறேன் நான்......


தொப்புள் கொடி

கீளே இழுபட்டு வர

தூர நடக்கிறேன் துணிச்சலுடன்……….


அக்கினிகள் சூழ்ந்து கொண்டிருக்கும்

என் காலத்துள் வாழ

நானும் ஒரு அக்கினிப் பந்தாய்

உருண்டு திரிகிறேன்


விலங்காயும் பறவையாயும் மனிதனாயும்

அங்கங்கள் விரிய

முகத்தில்ஆண் குறியைத் தரித்துக் கொண்டு

தலையில் வால் முளைத்து

அலைகிறது என் உயிர் பிண்டம்


நெருப்பை சப்பி

கரியைப் பீய்ச்சியும்

தாகம் அடங்காது

எங்கும் எதிரொலிக்கிறது

என் ஆண்மாவின் குரல்………!


முகத்தில் இருக்கும்

என் ஆண் குறியில்

யோனியைப் பொருத்தி

என்னைப் பிரதி செய்யுங்கள்

ஓன்றாய்……..நூறாய்……ஆயிரமாய்……..

அதன் பின் எந்தக்கரம்

என் குரல் வளையை நெரித்து

தலையில் மலம் கழிக்கிறது பார்க்கிறேன்…….


நான் கர்ப்பம் தரித்த தாயும்

அவள் கர்ப்பப் பையும் மட்டுமே

நம்பிக்கை இழந்தவை

சூல் சிதைந்து

நாற்றமெடுத்துக் கிடந்த

இரத்தப் பிண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுந்தவன் நான்………
 
◄Design by Pocket