இருத்தல் என் சுதந்திரம்

சனி, 31 அக்டோபர், 2009

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்

சனி, 31 அக்டோபர், 2009

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்


வயிற்றில் கரு சூல் கொள்ளாது

கர்ப்பம் சிதைந்து

அடிக்கடி கட்டி விழுந்து

துவாலை இறைத்து

நம்பிக்கை இழந்து கிடக்கும்

ஒரு தாயின் கர்ப்பப் பைக்குள்

நாற்றம் எடுத்துக்கிடக்கும்

சிறு இரத்ததுண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுகிறேன் நான்......


தொப்புள் கொடி

கீளே இழுபட்டு வர

தூர நடக்கிறேன் துணிச்சலுடன்……….


அக்கினிகள் சூழ்ந்து கொண்டிருக்கும்

என் காலத்துள் வாழ

நானும் ஒரு அக்கினிப் பந்தாய்

உருண்டு திரிகிறேன்


விலங்காயும் பறவையாயும் மனிதனாயும்

அங்கங்கள் விரிய

முகத்தில்ஆண் குறியைத் தரித்துக் கொண்டு

தலையில் வால் முளைத்து

அலைகிறது என் உயிர் பிண்டம்


நெருப்பை சப்பி

கரியைப் பீய்ச்சியும்

தாகம் அடங்காது

எங்கும் எதிரொலிக்கிறது

என் ஆண்மாவின் குரல்………!


முகத்தில் இருக்கும்

என் ஆண் குறியில்

யோனியைப் பொருத்தி

என்னைப் பிரதி செய்யுங்கள்

ஓன்றாய்……..நூறாய்……ஆயிரமாய்……..

அதன் பின் எந்தக்கரம்

என் குரல் வளையை நெரித்து

தலையில் மலம் கழிக்கிறது பார்க்கிறேன்…….


நான் கர்ப்பம் தரித்த தாயும்

அவள் கர்ப்பப் பையும் மட்டுமே

நம்பிக்கை இழந்தவை

சூல் சிதைந்து

நாற்றமெடுத்துக் கிடந்த

இரத்தப் பிண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுந்தவன் நான்………

1 comments:

Unknown சொன்னது…

ada pooda ne innum thirunthave illaiya? mm mm ok ok Keep dap

கருத்துரையிடுக

 
◄Design by Pocket